இலங்கை ஆறுநாட்டு வேளாளர் சபையின் தலைவரின் தலைமையில் நிர்வாக சபை குழுவினர் இந்திய உயர்ஆணையரை இன்று சந்தித்தனர். இச்சந்திப்பின்போது தலைவர் அவர்கள் எமது சமூகத்தின் வரலாறு, தென்னிந்தியாவுடன் எமக்குள்ள தொடர்பு, இலங்கையில் வாழும் எமது சமூகத்தினரின் உயர் பதவிகள், தொழில் விவரங்கள், கல்வி நிலைமை, சமயம் போன்ற விவரங்களை உயர்ஆணையருக்கு தெரிவித்தார். பின் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்திய புலமை பரிசில், ஓ சி ஐ பெறுவதில் எமக்குள்ள பிரச்சனைகள், எமது சமூகத்தின் வளர்ச்சிக்கும் கல்விக்கும் இந்தியா எவ்வாறான உதவிகளை வழங்கலாம் போன்ற விடயங்களும் சமூகத்தில் உள்ள குறைபாடுகளையும் அவருடன் கலந்துரையாடினார். இந்திய உயர்ஆணையர் எமது சபைக்கு விஜயம் செய்வதாகவும் கல்வி, ஓ சி ஐ குழுவினர்களை எமது சமூகத்தினருடன் கலந்துரையாட ஏற்பாடு செய்து தருவதாகவும் வாக்குறுதி அளித்தார்.