அன்பார்ந்த சொந்த பந்தங்களுக்கு,
கடந்த ஆறு மாதங்களாக அயராது பாடுபட்டு சிறப்பாக ஏற்பாடுகளை மேற்கொண்டு குடும்ப விழா 2025 மாபெரும் வெற்றி நிகழ்வாக நம் சொந்த பந்தங்கள் சுமார் 5000 பேருடன் கோலாகலமாக நேற்று நடைபெற்று முடிவடைந்துள்ளமை மகிழ்வுக்குரிய விடயமாகும்.
இவ்விழாவின் வெற்றி நம் சொந்த பந்தங்களாகிய தங்களின் வருகையும் பங்களிப்புமேயாகும் என்றால் அது மிகையாகாது.
எமது அழைப்பை ஏற்று இக் குடும்ப விழா 2025ற்கு வருகை தந்த உங்கள் அனைவருக்கும் இவ் வேளை எனது சார்பிலும் சபை சார்பிலும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
நன்றி
இங்ஙனம்
செ.ஜெயகருணாகரன்
தலைவர்